BREAKING NEWS
latest

Uae News - Arab Tamil Daily - The 24×7 Gulf News

Latest Uae News News, Articles, Uae News Images, Videos, Full-Time GCC Arabic News in Tamil, Film, Entertainment, Politics, and Sports Updates from Arab Tamil Daily.

Tuesday, January 23, 2024

ஷார்ஜாவில் கண்டித்ததால் ஏற்பட்ட முன்விரோதம் இந்தியரை கொலை செய்து பாலைவனத்தில் புதைத்த கொடுரமான சம்பவம் அரங்கேறியுள்ளது

இந்தியர் பணியிடத்தில் வைத்து கண்டித்ததன் காரணமாக ஏற்பட்ட முன்விரோதம் மூலம் இந்த கொலை நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Image : கொலை செய்யப்பட்ட அனில்குமார்

ஷார்ஜாவில் கண்டித்ததால் ஏற்பட்ட முன்விரோதம் இந்தியரை கொலை செய்து பாலைவனத்தில் புதைத்த கொடுரமான சம்பவம் அரங்கேறியுள்ளது

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவில் இந்தியர் ஒருவரை கடத்தி கொலை செய்து குழிதோண்டி புதைத்த வழக்கில் பாகிஸ்தானை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருவனந்தபுரம் முட்டடையை சேர்ந்த அனில்குமார் வின்சென்ட் (வயது-60) என்பவரே உயிரிழந்த இந்தியர். அனில் கடந்த ஜனவரி 2ம் தேதி காணாமல் போனார். துபாயில் உள்ள டி சிங் டிரேடிங் என்ற நிறுவனத்தில் பி.ஆர்.ஓ- வாக வேலை செய்து வந்தார்.

மேலும் குற்றவாளியாக கைது செய்யப்பட்ட இரண்டு பாகிஸ்தான் குடிமக்கள் இந்த நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள். குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். அனில் குமார் கண்டித்ததன் காரணமாக ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தில் அனில் குமார் கடந்த 36 ஆண்டுகளாக ஊழியராக உள்ளார்.

போலீசார் விசாரணையில், அனில் குமாரை கழுத்தை நெரித்து கொன்று, வாகனத்தில் எடுத்து சென்று ஷார்ஜா பாலைவனத்தில் புதைத்தது தெரிய வந்துள்ளது. ஜனவரி 12ஆம் தேதி போலீஸார் சடலத்தை மீட்டனர். இந்த சம்பவத்தில் பாகிஸ்தான் நாட்டவர்கள் மூவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சடலத்தை மறைப்பதற்காக கொண்டு செல்லப்பட்ட வாகனத்தின் ஓட்டுநரான முன்றாவது குற்றவாளி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து தப்பித்து பாகிஸ்தான் சென்றார் என தெரிவிக்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Indian Worker | Dubai Police | Pakistans Arrested

Add your comments to Uae News

Saturday, October 28, 2023

வளைகுடா பயணிகள் கவனத்துக்கு ஊறுகாய், நெய் உள்ளிட்ட 13 வகையான பொருட்கள் செக்-இன் பைகளில் கொண்டு செல்ல தடை

இது இந்தியாவின் அனைத்து விமான நிலையத்திற்கும் பொருந்தும், எனவே இத்தகைய காரணங்களால் விமான நிலைய அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டாலும் எந்த பலனும் இல்லை என்பதை கவனத்தில் கொள்க

Image : Indian Airport

வளைகுடா பயணிகள் கவனத்துக்கு ஊறுகாய், நெய் உள்ளிட்ட 13 வகையான பொருட்கள் செக்-இன் பைகளில் கொண்டு செல்ல தடை

இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்கு விமானத்தில் பயணம் செய்யும்போது கொண்டு வரக்கூடாத பொருட்களின் பட்டியலை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். வணிகம், சுற்றுலா மற்றும் வேலைவாய்ப்பு நோக்கங்களுக்காக ஏராளமான இந்தியர்கள் வளைகுடாவிற்குச் செல்வதால், இந்தியா-யுஏஇ விமானப் பாதை மிகவும் பரபரப்பான வழித்தடங்களில் ஒன்றாகும், மேலும் பண்டிகைக் காலம் நெருங்கும்போது பார்வையாளர்களின் வருகை கணிசமாக அதிகரிக்கும். மும்பை சர்வதேச விமான நிலையத்தில் தடை செய்யப்பட்ட பொருட்களை உள்நாடு மற்றும் வெளிநாட்டு பயணிகள் எடுத்துச் செல்வதால்,செக்-இன்(Check-In) பேக்கேஜ் நிராகரிப்பு அதிகரித்துள்ளது.

பயணிகள் எடுத்து செல்கின்ற சாமான்களில் கொப்பரை மற்றும் பட்டாசுகள் வரை:

செக்-இன் சாமான்களில் அடிக்கடி காணப்படும் சில தடைசெய்யப்பட்ட பொருட்கள் உலர்ந்த தேங்காய்(கொப்பரை), பட்டாசுகள், தீப்பெட்டிகள், பெயிண்ட், கற்பூரம், நெய், ஊறுகாய், எண்ணெய் உணவுகள், இ-சிகரெட்டுகள், லைட்டர்கள், பவர் பேங்க்கள் மற்றும் ஸ்ப்ரே பாட்டில்கள் போன்ற பொருட்களில் சில. பல பயணிகள் இதைப்பற்றி தெரியாமல் இந்த அனைத்து பொருட்களையும் கொண்டு வருகிறார்கள். இது ஆபத்தை உருவாக்குகிறது. இந்த பொருட்கள் வெடிக்கும் திறன் காரணமாக விபத்துகளின் தீவிரத்தை அதிகரிக்கின்றன.

எரியக்கூடிய பொருட்கள்:

கடந்த ஆண்டு, ஒரே மாதத்தில் பயணிகளின் செக்-இன் பைகளில் 943 காய்ந்த தேங்காய்கள் கண்டுபிடிக்கப்பட்டன. காய்ந்த தேங்காயில் அதிக அளவு எண்ணெய் இருப்பதால், அது தீயை உண்டாக்கும். இந்தியாவின் சிவில் ஏவியேஷன் செக்யூரிட்டி பணியகம் (BCAS) மார்ச் 2022 இல் இதை தடைசெய்யப்பட்ட பொருட்களின் பட்டியலில் சேர்த்தது. இதுபற்றி பெரும்பாலான பயணிகளுக்கு இன்னும் தெரியவில்லை.

பயணிகளின் கவனம்:

செக்-இன் சாமான்களை நிராகரிக்கும் போக்கு அதிகரித்து வருவது, விமானத்தில் எடுத்துச் செல்லப்படும் தடைசெய்யப்பட்ட அல்லது ஆபத்தான பொருட்களைப் பற்றி பொதுவான பயணிகளிடையே விழிப்புணர்வு இல்லாததைக் குறிக்கிறது. ஆபத்தான மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்கள் தொடர்பாக விமான நிலையம் அல்லது விமான நிறுவனங்கள் வழங்கும் வழிகாட்டுதல்களை தெரிந்துகொள்வதற்கும் புரிந்துகொள்வதற்கும் முன்னுரிமை அளிக்குமாறு அதிகாரிகள் பயணிகளை கேட்டுக்கொள்கிறார்கள்.

செக்-இன் பேக்கேஜ் ஸ்கிரீனிங் செயல்முறை:

திரையிடப்பட்ட மொத்த பைகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது நிராகரிக்கப்பட்ட செக்-இன் பைகளின் விகிதம் டிசம்பர் 2022 இல் 0.31 சதவீதத்திலிருந்து மே மாதத்தில் 0.73 சதவீதமாக அதிகரித்துள்ளது. மும்பை விமான நிலையத்தில் உள்ள பேக்கேஜ் அமைப்பு, டெர்மினல் இரண்டில் ஒரு மணி நேரத்திற்கு 9,600 பைகளையும், டெர்மினல் ஒன்றில் மணிக்கு 4,800 பைகளையும் கையாளும் 8 கிமீ பேக்கேஜ் பெல்ட்டைக் கொண்டுள்ளது.

தடைசெய்யப்பட்ட பொருட்களில் சில:

  1. காய்ந்த தேங்காய்(கொப்பரை) 
  2. பெயிண்ட் 
  3. பட்டாசுகள்
  4. தீப்பெட்டிகள்
  5. பெயிண்ட்
  6. கற்பூரம் 
  7. நெய் 
  8. ஊறுகாய் 
  9. எண்ணெய் உணவு பொருட்கள் 
  10. மின் சிகரெட்டுகள் 
  11. லைட்டர்கள் 
  12. பவர் பேங்க்கள் 
  13. ஸ்ப்ரே பாட்டில்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Indian Airport | Uae Travel | Banned Items

Add your comments to Uae News

Tuesday, July 18, 2023

ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் டெலிவரி ஓட்டுநர்களுக்காக 356 ஓய்வு நிலையங்களைத் தொடங்கியுள்ளது

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சகம், அமீரகம் முழுவதும் டெலிவரி ஓட்டுநர்களுக்காக ஓய்வு நிலையங்களைத் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது

Image : தொழிலாளர்களின் ஓய்வு நிலையம்

ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் டெலிவரி ஓட்டுநர்களுக்காக 356 ஓய்வு நிலையங்களைத் தொடங்கியுள்ளது

ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் டெலிவரி ஓட்டுநர்களுக்காக 356 ஓய்வு நிலையங்களைத் தொடங்கியுள்ளதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸின் மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சகம் (MOHRE) இன்று(18/07/23) செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.குறிப்பாக கோடைக் காலத்தில், கொளுத்தும் வெயில் மற்றும் வெப்பக் களைப்பிலிருந்து ஓட்டுநர்களைப் பாதுகாக்க, ஓய்வு நிலையங்கள் அத்தியாவசிய சேவைகளை வழங்குகின்றன என்று ஆணையம் மேலும் கூறியது.

இந்த நடவடிக்கை ஜூன் 15 முதல் செப்டம்பர் 15 வரை, மதியம் 12.30 மணி முதல் 3 மணி வரையிலான மதிய இடைவேளை ஏற்பாட்டிற்கு ஏற்ப தயார் செய்யப்படுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சகம் மேலும் கூறுகையில் கோடை காலத்தில் டெலிவரி தொழிலாளர்களின் பாதுகாப்பிற்கான எங்கள் அர்ப்பணிப்பு இந்த நல்ல முயற்சியில் பிரதிபலிக்கிறது, மேலும் பல அரசு நிறுவனங்களின் ஆதரவுடன் தொடர்புடைய தனியார் துறை விநியோக நிறுவனங்களின் ஒருங்கிணைப்பில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது எனவும் தெரிவித்துள்ளது.

Arabcountry Summer | Delivery Drivers | Rest Station

Add your comments to Uae News

Tuesday, April 18, 2023

வெளிநாட்டில் வேலைக்காக வந்து தற்கொலை செய்வதாக இருந்தால், ஊரில் சென்று அதை பண்ணுங்க...

துபாயில் தமிழக இளைஞர் தற்கொலை, நீண்ட போராட்டத்துக்கு பிறகு உடல் இன்று தாயகம் சென்றடைந்தது

Image : உயிரிழந்த இளைஞர் மற்றும் பெற்றோர்

வெளிநாட்டில் வேலைக்காக வந்து தற்கொலை செய்வதாக இருந்தால், ஊரில் சென்று அதை பண்ணுங்க...

துபாயில் ஆஸ்டர் மருத்துவமனையில் செவிலியராக வேலை செய்து கொண்டிருந்தவர் விஷ்ணு பிரகாஷ்(வயது-26). இவர் இந்தியா, தமிழகம், வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். கடந்த மாதம் விடுமுறைக்கு ஊருக்கு சென்று இருக்கிறார், வீட்டில் திருமண ஏற்பாடு செய்திருக்கிறார்கள், அவரும் அதற்கு சரி என்று ஒப்புதல் கொடுத்துவிட்டு திரும்பவும் துபாய் திரும்பி இருக்கிறார்.

இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 10ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார் காரணம்???? தன்னுடன் வேலை செய்த ஒரு கேரளாவை சேர்ந்த பெண்ணை காதலித்ததாகவும், ஏதோ காரணத்தினால் காதல் முறிந்து விட்டதால் விரக்தியில் இறந்து விட்டதாக கூறப்படுகிறது. சாதாரணமாக தூக்கில் தொங்கியோ, விஷம் குடித்து அல்லது மாடியில் இருந்து குதித்து இறந்து விட்டால் பரவாயில்லை. மருத்துவமனையில் உள்ள மருந்தகத்தில் பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்த ஒரு உயிர் கொல்லி மருந்தினை திருடி இருக்கிறார்.

தொடர்ந்து அந்த மருந்தினை இன்சுலின் வழியாக கொஞ்சம் கொஞ்சமாக உடலில் ஏற்றி இருக்கிறார். அவருடைய அறையில் இருந்த மற்ற நபர்கள் கேட்ட பொழுது வயிற்று வலி என்பதாக கூறி, மருத்துவர் தான் மருந்தை கொடுத்ததாக சொல்லி இருக்கிறார். இவர் அதே துறையில் வேலை செய்வதால் அதை உண்மை என்று நம்பியுள்ளனர். ஆனால் உண்மையில் அந்த மருந்தானது உடலில் செலுத்தினால் முதலில் மூளை சாவு ஏற்படும், பிறகுதான் அவர் இறக்க கூடுமாம், வலி இல்லாமல் இறக்கலாமாம் அதை அறிந்தே செய்து இருக்கிறார். அவர் தற்கொலை செய்து கொண்டால் பரவயில்லை அடுத்து நடந்ததை பாருங்கள்.

தொடர்ந்து பல இடங்களில் பலரிடம் அந்த பையனின் குடும்பம் உதவி கேட்டும், உடலை ஊருக்கு அனுப்ப முடியாததால் அமீரகத்தில் உள்ள சமூக ஆர்வலர் கௌசர் அவர்களிடம் உதவி கேட்டு மார்ச் 24ஆம் தேதி வந்திருந்தார்கள். குடும்பத்தின் நிலை அறிந்து உடலை ஊருக்கு அனுப்ப ஆவணங்களை சேகரிக்க தொடங்கினார். ஆனால் இவர் தற்கொலை தொடர்பான வழக்கு துபாய் உயர் நீதிமன்றத்தில் இருந்தது மற்ற எல்லா ஆவணங்களையும் சரி செய்து தயார் செய்து வைத்த நிலையில் உயர்நீதிமன்றத்தில் இருந்து ஒரு ஆவணம் வேண்டி இருந்தது.

ஆனால் நீதிமன்றமோ வழக்கினை தீவிரமாக விசாரிக்க சொன்னார்கள், அவருக்கு மருந்து எப்படி கிடைத்தது, இந்த மருந்தை பெட்டகத்தில் இருந்து எடுக்க சாவியை கொடுத்தது யார்....??? அறையில் இருந்தவர்கள் ஏன் அதை பரிசோதிக்கவில்லை...?? அவர் காதல் தோல்வி பிரச்சனை இருந்த பொழுது தனியாக அறையில் விட்டது ஏன்...??? என பல கோணங்களில் விசாரணைகள் நடந்து கொண்டிருக்க, முக்கிய காரணமாக அவர் செலுத்திக்கொண்ட மருந்து தடை செய்யப்பட்ட மருந்தாகும், அதை சரியான அனுமதியின்றி எடுக்கவும் முடியாது, எப்படி அவர் கையில் அது வந்தது என வழக்கு நீட்டிக்கொண்டே போக, அறையில் உடன் இருந்தவர்களுக்கும் பிரச்சினைகள் ஏற்பட்டது.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை கடைசியாக அவர் தற்கொலை தான் செய்து கொண்டார் என்கிற தீர்ப்பு நீதிமன்றத்தில் இருந்து வந்தது, ஒரு வழியாக ஊருக்கு அனுப்பி விடலாம் என்று பார்த்தால், சுகாதாரத்துறை அமைச்சகத்தில் இருந்து ஒரு ஆவணம் தேவைப்பட்டது அதே காரணம் சொன்னார்கள். கிட்ட தட்ட மார்ச் 24 தேதி முதல்PRO, HR, போலீஸ் ஸ்டேஷன், மார்சுவரி, நீதி மன்றம் என எல்லா இடத்திற்கும் பலமுறை அலைந்தும், தினமும் தொலைபேசியில் அழையத்தவாரும் இருந்தனர் பெற்றோர், நேற்று முன்தினம் காலையில் கூட அழைத்திருந்தேன் ஆனால் ஒரு விவரம் இல்லாததால் எப்படியும் விடுமுறைக்குப் பிறகே உடல் செல்லும் என்று நினைத்தேன்.

இதற்கிடையே சொந்த விஷயமாக கௌசர்(நாளை) ஊருக்கு செல்ல வேண்டியது இருந்தது. குடும்பத்தார் அங்கிருந்து ஐயா நீங்கள் கிளம்புவதற்கு முன் உடலை அனுப்பி விடுங்கள் என்று கெஞ்சி கொண்டிருந்தார்கள். இறந்தவரின் தாய் தந்தை சரியாக உணவு உட்கொள்ளாமல், அவர்களும் படுத்த படுக்கையாக ஆகிவிட Glucose ஏற்றி கொண்டு இருக்கிறார்கள். கடந்த தினங்களில் எண்ணிடம் வந்த எல்லா மரண கேஸ் முடித்து விட்டேன்... ஆனால் இது முடியாமல் இருந்தது என்றும் அவர் கூறுகிறார்.

ஆனால் இன்று(நேற்று) மதியம் ஆவணங்கள் வந்துவிட்டது, மீதி உள்ள எல்லா ஆவணங்களையும் ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்தோம். கம்பெனி பி.ஆர்.ஓ உடனடியாக நாம் ஏற்கனவே சொல்லி இருந்த வழிகாட்டுதலின்படி, சற்றும் தாமதப்படுத்தாமல் இந்திய தூதரகம் சென்று உரிய ஆவணங்களை பெற்றுக்கொண்டு நேற்று இரவு 11:30 மணிக்கு ஏர் இந்தியா விமானம் மூலம் சென்னைக்கு உடலை அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு, ஒரு வழியாக உடல் இன்னும் ஒரு மணி நேரத்தில் சென்னையில் தரை இறங்கும் என்றும், 38 நாட்கள் போராட்டத்திற்குப் பிறகு ஒரு வழியாக விடிவு காலம் பிறந்தது என்று தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

சாதாரணமாக, உடல்நலக்குறைவு, விபத்து இப்படி எதாவது ஒன்று இறந்தால் விதி என்று கூறலாம். நல்ல பெற்றோர்கள், நல்லததொரு வேலை எல்லாம் இருந்தும் ஏன் இப்படி இருக்கிறார்கள் இன்றைய இளைஞர்கள்.. காதலி என்று கூறும் அவளுக்கு என்ன???? இன்னொரு திருமணம் செய்து கொண்டு ஒன்னும் நடக்காது போல் இருப்பாள். போனது யார்க்கு அவருடைய பெற்றொருக்கு. ஊரில் இருந்து தற்கொலை செய்தால் கூட பரவில்லை.... 38 நாட்கள் போராட்டம் அந்த பயனுடைய வீட்டில் உள்ளவர்கள் இவ்வளவு நாட்கள் எவ்வளவு துயரத்துடன் இருந்து இருப்பார்கள் என்பது கூற முடியாத வலியே.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 Telegram ✔ குழுவில் இணையுங்கள்

India Nurse | India Suicide | Daubi Nurse

Add your comments to Uae News

Sunday, April 16, 2023

துபாயில் ஏற்பட்ட பயங்கரமான தீ விபத்தில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் உட்பட 16 பேர் வரையில் உயிரிழந்தனர்

அமீரகத்தில் ஏற்பட்ட பயங்கரமான தீ விபத்து நான்கு இந்தியர்கள் உள்ளிட்ட 16 பேர் பலி மற்றும் 9 பேர் காயமடைந்ததனர்

Image : உயிரிழந்த 4 இந்தியர்கள்

துபாயில் ஏற்பட்ட பயங்கரமான தீ விபத்தில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் உட்பட 16 பேர் வரையில் உயிரிழந்தனர்

துபாயில் உள்ள தேராவில் ஏற்பட்ட தீ விபத்தில் மலையாள தம்பதிகள் உட்பட 16 பேர் வரையில் உயிரிழந்தனர். மேலும் ஒன்பது பேர் காயமடைந்ததாக துபாய் சிவில் டிஃபென்ஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். அல் ராஸ் பகுதியில் உள்ள ஃபிர்ஜ் முராரில் உள்ள தலால் கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

சம்பவ இடத்தில் உள்ள சமூக சேவகர் நசீர் வதனாபள்ளி கூறுகையில், தீ விபத்தில் கேரளா தம்பதி உட்பட 4 இந்தியர்கள் உயிரிழந்தனர் எனவும், இதில் இருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவித்தார். இதை தவிர மூன்று பேர் ஒரே குடும்பத்தை சேர்ந்த பாகிஸ்தான் நாட்டவர்கள் மற்றும் ஒரு நைஜீரிய பெண் ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். உயிரிழந்த மற்றவர்களை அடையாளம் காணும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியர்கள் யாராவது உள்ளார்களா என்பது மருந்துவ அறிக்கை வந்த பிறகே தெரியவரும். அதேபோல் காயமடைந்த 9 பேர் எந்தெந்த நாட்டவர்கள் என்ற விபரங்களும் வரும் மணிநேரத்தில் வெளியாகும் என்று தெரிகிறது.

உயிரிழந்த 4 இந்தியர்கள் விபரங்கள் வெளியாகியுள்ளது. அதில் தமிழகத்தை சேர்ந்த காவலாளியாக வேலை செய்துவந்த ரபீக் மற்றும் பெயிண்டிங் தொழிலாளியாக வேலை செய்துவந்த இமாம் காசிம் ஆகியோர் தீயினை அணைக்கும் முயற்சியில் உயிரிழந்தனர். உயிரிழந்த கேரளா தம்பதியினர் விவரங்களும் வெளியாகியுள்ளது. மலப்புரம் வெங்கரைச் சேர்ந்த களங்கடன் ரிஜேஷ், அவரது மனைவி ஜிஷி என்பதும் தெரியவந்துள்ளது. இறந்த ரிஜேஷ் தேராவில் டிராவல்ஸ் நிறுவன ஊழியராக உள்ளார். இவரது மனைவி ஜிஷி கிசைஸ் கிரசண்ட் பள்ளியில் ஆசிரியையாக உள்ளார்.பக்கத்து அறையில் தீப்பிடித்ததால் ஏற்பட்ட புகை மூட்டத்தால் மூச்சுத்திணறி ரிஜேஷ் மற்றும் அவரது மனைவி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் காயமடைந்தவர்கள் ரஷித் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த கட்டிடத்தில் சனிக்கிழமை(நேற்று) மதியம் 12.35 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. ஐந்து மாடிக் கட்டிடத்தின் நான்காவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டது. மின்கசிவு காரணமாக ஏசி வெடித்து தீப்பிடித்ததாக முதற்கட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக தீயை அணைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. காயமடைந்தவர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு சிவில் பாதுகாப்பு துறையின் செய்தி தொடர்பாளர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 Telegram ✔ குழுவில் இணையுங்கள்

Indians Death | Fire Accident | Dubai News

Add your comments to Uae News

Wednesday, December 14, 2022

அமீரகத்தில் வேலைக்கு செல்கின்ற நபர்கள் கவனத்திற்கு புதிய சட்டம் நடைமுறையில் வந்துள்ளது

அமீரகத்தில் இருந்தவாறே அதை மீண்டும் 2 மாதங்களுக்கு புதுப்பிக்கும் நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

Image : Uae

அமீரகத்தில் வேலைக்கு செல்கின்ற நபர்கள் கவனத்திற்கு புதிய சட்டம் நடைமுறையில் வந்துள்ளது

இந்த புதிய விதிமுறை அமீரகத்தின் துபாய் தவிர்த்து மற்ற எமிரேட்ஸ்களில் நேற்று(13/12/22) நடைமுறையில் வந்துள்ளது. இதன் காரணமாக அமீரகத்திற்கு 2 மாதகால Validity Visit விசாவில் வேலைக்காக செல்கின்ற நபர்கள், 2 மாதங்கள் முடியும் முன்னர் நிரந்தரமான வேலை கண்டுபிடித்து கம்பெனி விசாவுக்கு மாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

ஆனால் கடந்த தினம் வரையில் 2 மாதங்களுக்குள் வேலை கிடைக்கவில்லை என்றாலும், அமீரகத்தை விட்டு வெளியேறாமல் அங்கிருந்து கொண்டே மேலும் 2 மாதங்களுக்கு Visit விசாவை புதுப்பிக்க முடிந்தது பெரும் ஆறுதலாக இருந்தது. ஆனால் இந்த நடைமுறை ரத்து ஆகியுள்ளதால் அவர்கள் 2 மாதங்களுக்குள் வேலை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் Exit அடித்து நாட்டை விட்டு வெளியேறி மற்றொரு நாட்டில் தங்கியிருந்து மீண்டும் புதிய விசா அடித்து அமீரகத்திற்கு செல்ல வேண்டியது இருக்கும்.

இது பெரும் பணச்செலவு ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது. துபாய் எமிரேட்ஸில் இந்த சட்டம் ரத்து செய்யவில்லை என்றாலும் வரும் நாட்களில் துபாயை மட்டுமே குறிப்பிட்டு விசா பெற முயற்சிக்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் அங்கும் புதிய சட்டம் நடைமுறையில் வரலாம் என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.

Visit Visa | Uae Visa | Renewal Stop |

Add your comments to Uae News

Saturday, October 9, 2021

அபுதாபியில் பணிபுரியும் இந்தியர் 6,000 மரக்கன்று நட்டு காடுகளை உருவாக்கி வருகின்றார்

அபுதாபில் அரசு துறையில் வேலை செய்து வருகின்ற தமிழர் 6,000 மரக்கன்று நட்டு வனப்பகுதியை உருவாக்கியுள்ளார்

Image : குப்புசாமி மற்றும் அவர் உருவாக்கிய காடு

அபுதாபியில் பணிபுரியும் இந்தியர் 6,000 மரக்கன்று நட்டு காடுகளை உருவாக்கி வருகின்றார்

தர்மபுரி மாவட்டத்தில் 50 சென்ட் விவசாய நிலத்தில், 6,000 மரக்கன்றுகளை நட்டு, அடர்ந்த வனப்பகுதியை அபுதாபியில் அரசு துறையில் வேலை செய்து வருகின்ற தமிழர் ஒருவர் உருவாக்கி உள்ளார். இது தொடர்பான விரிவான செய்தியை இங்கே பார்ப்போம்.தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த பறையப்பட்டிபுதூரை சேர்ந்தவர் குப்புசாமி(வயது-37). இவர் தன்னுடைய 50 சென்ட் விவசாய நிலத்தில் அடர்ந்த வனப்பகுதிகளை உருவாக்க திட்டமிட்டு, அதற்காக சில வருடங்களுக்கு முன்பு பணியை மேற்கொண்டார்.

அபுதாபில் இருந்து விடுமுறைக்காக ஊருக்கு வந்தவர் ஒரு அடி இடைவெளியில் வேம்பு, புங்கன், அரசன், தேக்கு, கொய்யா, மா, பலா, சீதா, நாவல் உள்ளிட்ட 100 வகையான 6,000 மரக்கன்றுகளை நட்டு அதற்கு சொட்டு நீர்ப்பாசன முறையை பயன்படுத்தி வந்தார். இவருடைய அயராத முயற்சியின் காரணமாக மூன்று ஆண்டுகளுக்கு முன் வைக்கப்பட்ட மர கன்றுகள், தற்போது மரங்களாக வளர்ந்து அடர்ந்த வனப்பகுதியாக காட்சி அளிக்கிறது. இங்கு ஏராளமான பறவையினங்கள் வந்து செல்கிறது. ஐந்து லட்சம் ரூபாய் செலவு செய்த நிலையில், மரங்களை பராமரிக்க மாத சம்பளத்தில் ஒருவரை வேலைக்கும் வைத்துள்ளார்.

உலகெங்கிலும் விவசாய நிலங்கள்,மற்றும் காடுகள் உள்ளிட்டவை அழிக்கும் பல்வேறு வகையான சூழல் நிலவி வரும் நிலையில், அடர்ந்த வனப்பகுதிகளை குறைந்த இடத்திலேயே உருவாக்க முடியும் என்பதை பொதுமக்கள்,பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் விவசாய மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும், காடுகள் வளர்ப்பவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் ஊக்கத்தொகை மற்றும் மரக்கன்றுகளை அரசு இலவசமாக வழங்க வேண்டும் என்று குப்புசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

Add your comments to Uae News

Tuesday, September 28, 2021

அமீரகத்தில் பெரும் தொகையினை அதிகாரிகளிடம் நேர்மறையாக ஒப்படைத்த இந்திய இளைஞர் கவுரவிக்கப்பட்டார்

அஜ்மான் போலிசார் இந்தியரான தமிழக இளைஞரின் நேர்மையை பாராட்டி கவுரவப்படுத்தினர்

Image : அதிகாரியுடன் பாண்டியன்

அமீரகத்தில் பெரும் தொகையினை அதிகாரிகளிடம் நேர்மறையாக ஒப்படைத்த இந்திய இளைஞர் கவுரவிக்கப்பட்டார்

அமீரகத்தின் எமிரேட்டுகளில் ஒன்றான அஜ்மான் காவல்துறை இந்தியரான தமிழக இளைஞரை கவுரப்படுத்தி சான்றிதழ்களை வழங்கியுள்ளனர். சில தினங்களுக்கு முன்பு இந்தியரான பாண்டியன் வெளியே சென்றபோது ஒரு ATM அருகில் பெரும் தொகை கிடப்பதை கண்டார். இதையடுத்து பாண்டியன் நேர்மை தவறாமல் காவல்நிலையம் சென்று அந்த பணத்தை ஒப்படைத்தார். இதையடுத்து அவருடைய நேர்மையினை பாராட்டும் விதமாக லெப்.கேணல் அப்துல்லா கல்பான் அப்துல்லா அல் நுஐமி அவர்கள் இந்தியரான பாண்டியனை தலைமை அலுவலகத்திற்கு நேரடியாக அழைத்து நேர்மையையும் மற்றும் பாதுகாப்பாக தொகையை திருப்பி அளித்ததர்காக பாராட்டு சான்றிதழையும் வழங்கினார்.

சமூகத்தின் முன்னேற்றத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் உரிமைகளை பாதுகாக்க பொதுமக்களை ஊக்குவிப்பதற்காக, இவர்களை போன்ற நேர்மையான நபர்களை கவுரப்படுத்த அஜ்மான் காவல்துறை எப்போதும் ஆர்வமாக இருப்பதை அதிகாரி சுட்டிக்காட்டுகிறது. அதுபோல் பாண்டியன் அஜ்மான் காவல்துறைக்கு நன்றி மற்றும் பாராட்டுக்களைத் தெரிவித்தார், மேலும் இது தனக்கு கிடைத்த பெரிய கவுரவம் என்று அரபு தினசரி நாளிதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். மேலும் அதிகாரிகள் தங்கள் அதிகாரப்பூர்வமாக வலைதளத்தில் இந்த செய்தியை வெளியிட்டுள்ளனர்.

Add your comments to Uae News

இந்தியாவில் இருந்து அமீரகம் சென்று சாதித்து காட்டிய இந்திய பெண்மணியின் நிஜக்கதை இது

அமீரகத்தில் மூன்று திர்ஹாத்திற்கு உணவு, இந்திய பெண்மணியின் இந்த மனிதாபிமான செயலை வாழ்த்தியே ஆக வேண்டும்

Image : சாதனை பெண்மணி ஆயிஷா

இந்தியாவில் இருந்து அமீரகம் சென்று சாதித்து காட்டிய இந்திய பெண்மணியின் நிஜக்கதை இது

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த பன்னிரண்டு ஆண்டுகள் பொறியாளராகப் பணியாற்றிய ஆயிஷா கான் இப்போது சமையல்காரராக மாறியுள்ளார். வேலைப்பழு அதிகமாக இருந்ததால் அவர் அந்த வேலையை விட்டுவிட்டார். பின்னர் தானாக எதாவது செய்து சாதிக்க விரும்பிய ஆயிஷா இன்று ஒரு நாளைக்கு இரண்டாயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு பசியாறும் அளவுக்கு உணவு தயார் செய்து வழங்கி வருகிறார். நீங்கள் அஜ்மானில் உள்ள உணவு ஏடிஎம் -க்குச் சென்றால், பிரியாணி உட்பட எந்த உணவிற்கும் மூன்று திர்ஹம் மட்டுமே செலுத்தினால் போதும் என்பதே இதன் சிறப்பு அம்சமாகும்.

ஆயிஷா பற்றி கூற வேண்டுமானால், இவர் இந்தியாவின் அகமதாபாத் பகுதியை சேர்ந்தவர் ஆவார், இவரே இன்று ஐக்கிய அரபு எமிரேட்ஸில் மிக குறைந்த விலையில் உணவு வழங்கி அனைவரும் பாராட்டும் விதமாக இந்த சேவையினை செய்து வருகிறார். நாட்டில் உள்ள 80 சதவீதம் அளவிலான சாதாரண தொழிலாளர்களுக்கு 2024 குள் முடிந்தால் மூன்று திர்ஹாம்களுக்கும் குறைவான விலையில் உணவை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார். இந்த தொழிலை துவங்க பல்வேறுபட்ட பிரச்சனைகளை அவர் சந்தித்தார். தாயகத்தில் உள்ள அவருடைய வீடு உள்ளிட்டவை விற்று அதில் வந்த பணத்தை முதலீடாக கொண்டு 15 தொழிலாளர்களுடன் இதை துவங்கியுள்ளார்.

அதேபோல் உணவு சம்பந்தப்பட்ட தொழில் என்பதால் இதற்காக அனுமதி பெறுவதிலும் பல்வேறு பிரச்சனைகளை அவர் சந்திக்க வேண்டியது இருந்தது. இதை அனைத்தையும் தாண்டியே இவர் இந்த சேவையினை செய்து வருகின்றார். மேலும் இதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள ஏடிஎம் கார்டை ரீசார்ஜ் செய்து உணவு பெற்று கொள்ளும் வழிமுறையும் அறிமுகம் செய்துள்ளார். மூன்று வேளை உணவுக்கு 9 திர்ஹாம் மட்டுமே என்பது அமீரகத்தை பொறுத்தவரைவில் மிகவும் குறைந்த கட்டணமாகும். பசியுள்ள தொழிலாளர்களுக்கு குறைந்த விலையில் உணவு வழங்குதல் என்பதே இந்த ஏடிஎம் உணவகத்தின் முதன்மையான முயற்சி ஆகும். இவரை போன்று இன்னும் பல ஆயிஷாகள் முன்வர வேண்டும் என்று வாழ்த்துவோம்.

Add your comments to Uae News

Wednesday, September 22, 2021

அமீரகத்தில் இனிமுதல் முக்கியமான சில இடங்களில் முகக்கவசம் அணிய தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது

அமீரகத்தில் முகக்கவசத்தில் இருந்து முழுமையாக விடுதலை வெகு தொலைவில் இல்லை;சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது

Image : Burj Khalifa

அமீரகத்தில் இனிமுதல் முக்கியமான சில இடங்களில் முகக்கவசம் அணிய தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது

ஐக்கிய அரபு அமீரகத்தில் சில குறிப்பிட்ட பிரிவுகளில் முகக்கவசம் அணிவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மேலாண்மை கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரே வீட்டில் உள்ளவர்கள் வாகனங்களில் பயணம் செய்யும் போது முகக்கவசம் அணிய வேண்டியது இல்லை, அதேபோல் பொது இடங்களில் உடற்பயிற்சி செய்யும் போதும், கடற்கரைக்குச் செல்லும் மக்களுக்கு முககவசம் தேவையில்லை. அதேபோல் நீச்சல் குளங்களுக்கு செல்பவர்களுக்கும் முகக்கவசம் அணிய தேவையில்லை .மேலும் முகக்கவசம் அணிய தேவையில்லாத பிற இடங்கள் மூடிய அறைக்குள் தனிநபர்கள் இருக்கும் இடங்கள், சலூன் கடைகள், அழகு நிலையங்கள் மற்றும் தலை,முகம் சம்பந்தப்பட்ட சிகிச்சைக்காக மருத்துவ மையங்கள் ஆகியவை அடங்கும்.

இது தவிர மற்ற அனைத்து பொது இடங்களிலும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். வைரஸை எதிர்த்துப் போராடுவதில் முகக்கவசம் மிகவும் பயனுள்ள கருவிகளில் ஒன்றாகும் என்று NCEMA கூறியுள்ளது . ஆணையத்தின் இந்த புதிய முடிவு குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் அனைவரும் மகிழ்ச்சியடைய செய்துள்ளது. உலகளவில் அதிகமாக மக்களுக்கு தடுப்பூசி வழங்கியுள்ள நாடுகளில் ஐக்கிய அரபு அமீரகமும் ஒன்றாகும். அமீரகத்தில் 92 சதவீதம் மக்கள் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியும் 81 சதவீதத்திற்கும் அதிகமாக மக்கள் இரண்டு டோஸ் மேல் முழுமையான தடுப்பூசியையும் பூர்த்தி செய்துள்ளனர். நாட்டில் கடந்த சில வாரங்களாக தினசரி கோவிட் மூலம் பாதிக்கப்படுகின்ற மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகின்றன. இதன் காரணமாக முகக்கவசம் அணிவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add your comments to Uae News

Saturday, September 18, 2021

அபுதாபியில் நுழையும் சர்வதேச பயணிகளுக்கும் நாளை முதல் சில சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன

அபுதாபி எமிரேட்டில் நுழைவதற்கான கோவிட் பரிசோதனை இனிமுதல் தேவையில்லை என்ற புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது

Image : அபுதாபி சிட்டி

அபுதாபியில் நுழையும் சர்வதேச பயணிகளுக்கும் நாளை முதல் சில சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன

அபுதாபி எமிரேட்டில் நுழைவதற்கான கோவிட் பரிசோதனை இனிமுதல் தேவையில்லை என்று புதிய அறிவிப்பு இன்று(19/09/21) சனிக்கிழமை சற்றுமுன் நாட்டின் அவசரநிலை நெருக்கடி மற்றும் பேரிடர் குழுவினால் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த நடைமுறை நாளை, அதாவது செப்டம்பர்-19, 2021 ஞாயிற்றுக்கிழமை முதல் நடைமுறையில் வருகின்றன. இதன்படி கோவிட் பரிசோதனை தொடர்பான எந்தவிதமான சான்றிதழும் அளிக்காமல் நாட்டை விட்டு(அமீரகத்தை) வெளியேறாமல் அபுதாபியில் எந்த எமிரேட்டில் இருந்தும் கோவிட் தொற்று நாட்டில் கண்டறிவதற்கு முன்பு இருந்ததைப் போல சாதாரணமாக நுழைய முடியும். அபுதாபியில் சோதனை நேர்மறை விகிதம் 0.2 சதவீதமாக குறைந்துள்ள நிலையில் இந்த புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று அதிகாரபூர்வ செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

அதேபோல் அபுதாபி அவசரநிலை, நெருக்கடி மற்றும் பேரழிவுக் குழு சர்வதேச பயணிகளுக்கும் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளன, அதில் சர்வதேச நாடுகளில் இருந்து வருகின்ற பயணிகள் மற்றும் நேர்மறை(Positive) கண்டறியப்படும் நபர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் Wristbands பயன்படுத்தாமல் வீட்டு தனிமைப்படுத்தல் செய்துக்கொள்ள ஒப்புதல் அளித்துள்ளது. அதேநேரம் நேர்மறை(Positive) கண்டறியப்படும் நபர் தற்போதுள்ள நடைமுறைப்படி தொடர்ந்தும் கண்டிப்பாக Wristbands அணிந்து வீட்டு தனிமைப்படுத்தல் செய்துக்கொள்ள வேண்டும் இந்த முடிவும் 19 செப்டம்பர் 2021 ஞாயிற்றுக்கிழமை முதல் அமலுக்கு வருகின்றன. அதேபோல் கோவிட் பரிசோதனைகளும் தனிமைப்படுத்தல் காலத்தில் முறைப்படி அந்தந்த நாட்களில் செய்துக்கொள்ள வேண்டும். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு இணங்குவதை உறுதி செய்வதற்காக சுகாதார அமைச்சகத்தால் சம்பந்தப்பட்ட நபர்களை கண்காணிப்பது உள்ளிட்டவை செய்யப்படும், மீறுபவர்கள் மீதான புகார்கள் அட்டர்னி ஜெனரலுக்கு தெரிவிக்கப்படும்.

Search_tags

Add your comments to Uae News

Tuesday, September 14, 2021

துபாய் மற்றும் அபுதாபி இடையேயான பேருந்து சேவைகள் நீண்ட இடைவேளைக்கு பிறகு இரு அமீரக பயணிகள் பயன்பெறும் வகையில் மீண்டும் இயங்க துவங்கியுள்ளது

துபாய்-அபுதாபி பேருந்து சேவை நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது

Image Credit: RTA

துபாய் மற்றும் அபுதாபி இடையேயான பேருந்து சேவைகள் நீண்ட இடைவேளைக்கு பிறகு இரு அமீரக பயணிகள் பயன்பெறும் வகையில் மீண்டும் இயங்க துவங்கியுள்ளது

கோவிட் பரவல் காரணமாக கடந்த ஏப்ரல் முதல் நிறுத்தப்பட்ட துபாய் மற்றும் அபுதாபி இடையேயான பேருந்து சேவை மீண்டும் தொடங்கியது. அதாவது E101 பேருந்து சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. துபாயின் IBN Battuta பேருந்து நிலையத்திலிருந்து துவங்கி அபுதாபி Center பேருந்து நிலையத்தில் இந்த சேவை முடிவடையும். இந்த சேவைகளை ஆர்.டி.ஏ மற்றும் அபுதாபியின் ஒருங்கிணைந்த போக்குவரத்து சேவை மையத்துடன் இணைந்து செயல்படுத்துகிறது. பயணிகள் முககவசம் மற்றும் சமூக இடைவெளி தூரம் உள்ளிட்ட கோவிட் தடுப்பு விதிமுறைகள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று RTA அறிவுறுத்தியுள்ளது.

அபுதாபிக்குள் நுழைய தடுப்பூசி போடப்பட்ட பயணிகளின் கைபேசியில் உள்ள AlHosn செயலியில் பச்சை சமிக்ஞையைப்(Green Signal) காட்ட வேண்டும். அல்லது 'E' கடிதம் அதுவும் இல்லை என்றால் Star அடையாளம் பெற்றிருக்க வேண்டும். அதுபோல் தடுப்பூசி எடுக்காத நபர்கள் 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கோவிட் எதிர்மறை(Negative) சான்றிதழ் பயணத்தின் போது உடன் எடுத்துவர வேண்டும். இந்த சான்றிதழ் AlHosn செயலியிலும் இருக்க வேண்டும். தொடர்ச்சியாக இரண்டு முறை DPI பரிசோதனை முடிவுகள் ஏற்கப்படாது எனவும் தெரிவிக்கபட்டுள்ளது.

Add your comments to Uae News

Monday, September 6, 2021

அமீரகம் நெருக்கடியான சூழ்நிலையில் வேலை இழந்த வெளிநாட்டவர்கள் ஆறு மாதங்கள் வரை அபராதம் இன்றி நாட்டில் தங்க அனுமதிக்கும் புதிய முடிவை வெளியிட்டுள்ளது

ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை இழந்த வெளிநாட்டவர்கள் ஆறு மாதங்கள் வரை அபராதம் இன்றி நாட்டில் தங்கலாம்

Image : அழகிய அமீரகம்

அமீரகம் நெருக்கடியான சூழ்நிலையில் வேலை இழந்த வெளிநாட்டவர்கள் ஆறு மாதங்கள் வரை அபராதம் இன்றி நாட்டில் தங்க அனுமதிக்கும் புதிய முடிவை வெளியிட்டுள்ளது

அமீரகத்தில் விசா காலாவதியான பிறகும் வெளிநாட்டவர்கள் நாட்டில் தங்குவதற்கான சலுகை காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. புதிய அறிவிப்பின்படி சலுகைக் காலம் 90 முதல் 180 நாட்கள் வரையில் என்ற விகிதத்தில் நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய அரபு அமீரக வெளியுறவு அமைச்சர் தானி பின் அகமது அல் சியுடி அறிவித்தார். தற்போது நடைமுறையிலுள்ள சட்டப்படி வேலை இழந்த அல்லது விசா கேன்சல் செய்யப்பட்ட வெளிநாட்டினர் எந்த விதமான அபராதமும் இல்லாமல் 30 நாட்கள் நாட்டில் தங்கியிருக்க அனுமதி உள்ள நிலையில் திருத்தப்பட்ட புதிய அறிவிப்பு இன்று(06/09/21) திங்கள்கிழமை வெளியாகியுள்ளது.

இந்த புதிய முடிவு வேலை இழந்த இந்தியர்கள் உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு பெரும் நிவாரணம் அளிக்கும். ஆறு மாத காலம் நாட்டில் தங்கியிருப்பதன் மூலம் வாழ்வாதாரத்துக்காக நீங்கள் ஒரு புதிய வேலையை கண்டுபிடிக்க இது பெரும் உதவியாக இருக்கும், மேலும் இந்த கொரோனா நோய்தொற்று பரவல் காரணமாக வேலை இழப்புகள் அதிகரித்து வருகின்றன இந்த நெருக்கடியான சூழ்நிலையில் இந்த புதிய அறிவிப்பு பெரிதும் பயனுள்ளதாக அமையும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

Job Loss | Without Fine | Staying UAE

Add your comments to Uae News

Monday, August 30, 2021

அமீரத்தில் நுழைய புதிதாக சுற்றுலா விசா மற்றும் விசிட் விசாவுக்கு நாளை முதல் விண்ணப்பிக்க முடியும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது

இந்தியா உள்ளிட்ட நாட்டவர்கள் சுற்றுலா மற்றும் விசிட் விசாவில் நாளை முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நுழைய அனுமதி

Image : Dubai Airport

அமீரத்தில் நுழைய புதிதாக சுற்றுலா விசா மற்றும் விசிட் விசாவுக்கு நாளை முதல் விண்ணப்பிக்க முடியும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது

இந்தியா, இலங்கை உள்ளிட்ட தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டிருந்த அனைத்து நாடுகளிலிருந்தும் சுற்றுலா விசா மற்றும் விசிட் விசாவில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணிகள் இனிமுதல் நேரடியாக நுழைய முடியும். உலக சுகாதரத்துறை அமைப்பு மூலம் அங்கீகரிக்கப்பட்ட இரண்டு டோஸ் கோவிட் தடுப்பூசி முடித்தவர்கள் சுற்றுலா விசாவில் ஐக்கிய அரபு அமீரகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுகிறார்கள். நாட்டின் அடையாளம் மற்றும் குடியுரிமைக்கான மத்திய ஆணையம்(ICA), தேசிய அவசர நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் ஆகியவை இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய முடிவு ஆகஸ்ட்-30,2021 நாளை(திங்கள்கிழமை)முதல் அமலுக்கு வருகிறது. இதன் மூலம் புதிதாக சுற்றுலா விசா மற்றும் விசிட் விசாவுக்கு நாளை முதல் விண்ணப்பிக்க முடியும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

அதேபோல் முன்னர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நுழைய பயணத்தை தடை விதிக்கப்பட்டுள்ள நாடுகளிலுள்ள நபர்களின் விசிட் விசாக்களுக்கு இந்த புதிய அறிவிப்பு பொருந்தும் என்று அதிகாரிகள் நேற்று(28/08/21) சனிக்கிழமை தெரிவித்தனர். இதன் மூலம், இந்தியாவில் இருந்து இரண்டு டோஸ் தடுப்பூசி போடப்பட்ட பயணிகள் சுற்றுலா விசாவிற்கு விண்ணப்பிக்கலாம். விசிட் விசாவில் நாட்டிற்கு பயணம் செய்பவர்கள் விமான நிலையத்தில் வந்தவுடன் விரைவான பிசிஆர்(Rapid-Test) பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். தடுப்பூசி சான்றிதழ்களை ICA இணையதளம் மற்றும் அல் ஹுசைன் ஆப் மூலம் பதிவு செய்யலாம். தடை செய்யப்பட்ட நாடுகளில் இருந்து தடுப்பூசி எடுக்காதவர்களுக்கு தற்போது நடைமுறையிலுள்ள நிபந்தனைகள் அனைத்தும் மாறாமல் அப்படியே நடைமுறையில் உள்ளது. அதை கடைபிடித்து மட்டுமே அமீரகத்தில் நுழைய முடியும்.

Add your comments to Uae News

Friday, August 27, 2021

துபாய் ஆட்சியாளர் இந்தியர்கள் உள்ளிட்ட நான்கு ஹீரோக்களுக்கு பரிசுத்தொகையை வழங்கி கவுரவப்படுத்தினார்

துபாயில் பூனையை காப்பாற்றிய வீடியோவில் இருந்து 4 ஹீரோக்களுக்கு ஆட்சியாளர் ஷேக் முகமது 50000 திர்ஹம் பரிசு வழங்கி கவுரவப்படுத்தினார்

Image : பூனையை காப்பாற்றிய 4 பேர்

துபாய் ஆட்சியாளர் இந்தியர்கள் உள்ளிட்ட நான்கு ஹீரோக்களுக்கு பரிசுத்தொகையை வழங்கி கவுரவப்படுத்தினார்

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துணைத் தலைவர்,பிரதமர் மற்றும் துபாயின் ஆட்சியாளர் ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவருகள் கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் சிக்கிய கர்ப்பிணிப் பூனையை மீட்பதற்காக இரண்டு இந்தியர்கள் உட்பட நான்கு வெளிநாட்டவர்களுக்கு பரிசு வழங்கி கவுரவப்படுத்தினார். நான்கு பேருக்கும் தலா இந்திய ரூபாய் மதிப்பில் 10 லட்சம்(திர்ஹம் 50,000) வழங்கப்பட்டது. இந்தியா, கேரளா மாநிலத்தைச் சேர்ந்த RTA பஸ் டிரைவர் நசீர் முகமது, முகமது ரஷீத் மற்றும் பூனையை காப்பாற்றிய அருகிலுள்ள மளிகைக் கடையின் உரிமையாளர், மொராக்கோவைச் சேர்ந்த அஷ்ரப் மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த அதிஃப் மஹ்மூத் ஆகியோருக்கு பூனையை மீட்பதற்காக இந்த பரிசு வழங்கப்பட்டது. நேற்றிரவு ஆட்சியாளர் அலுவலகத்தில் இருந்து ஒரு மூத்த அதிகாரி நேரடியாக வந்து பரிசு வழங்கினார்.

இந்த மாதம் 24-ஆம் தேதி காலை 8 மணியளவில் கர்ப்பிணிப் பூனையை தெய்ரா ஃபிஜ் முராஜ் பகுதியில் இருந்து இவர்களால் மீட்கப்பட்டது. பக்கத்து வீட்டில் வசிக்கும் நசீர் முகமது,அஷ்ரப் மற்றும் அதிஃப் ஆகியோர் இரண்டாவது தளத்தில் சிக்கியிருந்த பூனையை ஒரு பெரிய படுக்கை விரிப்பை பயன்படுத்தி சமயோசிதமாக யோசித்து துரிதமாக செயல்பட்டு கீழே குதிக்க வைத்து மீட்டனர். இவர்கள் இதை செய்வது அந்த குடியிருப்பின் எதிரிலுள்ள மளிகை கடை நடத்தி வரும் அப்துல் ரஷீத் என்ற இளைஞர் தற்செயலாக வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த நிலையில் அது வைரலாகியது. இதையடுத்து இந்த வீடியோ ஷேக் முகமது அவர்களின் கவனத்திற்கு வந்த நிலையில் நான்கு பேர் கொண்ட அந்த குழுவின் பணியைப் பாராட்டி வீடியோவை ட்வீட் செய்தார்.

மேலும் இவர்களை நீங்கள் யாராவது பார்த்தால் வாழ்த்து கூறுங்கள் என்றும் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து இந்த மனிதாபிமான செயலை செய்த 4 பேரையும் பற்றிய தகவல்களை சேகரித்தனர். மேலும் அந்த கர்ப்பிணியான பூனையை கூடுதல் பராமரிப்புக்காக மீட்டுச் சென்றனர். சில வருடங்களுக்கு முன்பு ஆட்சியாளர் கார் மீதி குருவி ஒன்று கூடுகட்டி முட்டை போட்டிருந்த நிலையில் சில வாரங்களுக்கு வாகனத்தை எடுக்காமல் குஞ்சு பொரியும் வரையில் பொறுமை காத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பூனை காப்பாற்றப்பட்ட வீடியோ Link:https://m.facebook.com/story.php?story_fbid=1207292176439698&id=194194777749448

Add your comments to Uae News

Monday, August 23, 2021

மம்முட்டி மற்றும் மோகன்லால் ஆகியோருக்கு அவர்களின் சினிமா துறை சாதனைகள் மற்றும் மனிதாபிமான பணிகளுக்காக அமீரகத்தின் கோல்டன் விசாக்கள் வழங்கப்பட்டது

அபுதாபிக்கு நேரடியாக வந்து மம்முட்டி மற்றும் மோகன்லால் ஆகியோர் அமீரகத்தின் கோல்டன் விசாக்களை பெற்றுக் கொண்டனர்

Image : இருவர் கோல்டன் விசாக்களை பெற்றுக் கொண்டன காட்சி

மம்முட்டி மற்றும் மோகன்லால் ஆகியோருக்கு அவர்களின் சினிமா துறை சாதனைகள் மற்றும் மனிதாபிமான பணிகளுக்காக அமீரகத்தின் கோல்டன் விசாக்கள் வழங்கப்பட்டது

பிரபல இந்திய திரைப்பட நடிகர்களான மம்மூட்டியும்,மோகன்லாலும் ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் வழங்கப்படும் 10 வருடத்திற்கான கோல்டன் விசாவை பெற்றுக்கொண்டனர். அபுதாபி பொருளாதார மேம்பாட்டுத் ஆணையத்தின் அலுவலகத்திற்கு நேரடியாக வந்து இவர்கள் இருவரும் விசா பதிக்கப்பட்ட பாஸ்போர்ட்டைப் பெற்றனர். கோல்டன் விசா பெறுவதற்காக வெளிநாடு வாழ் இந்திய தொழிலதிபரான எம்.ஏ யூசுப் அலியுடன் இருவரும் ரோல்ஸ் ராய்ஸ் காரில் வந்தது இறங்கினர். அபுதாபி பொருளாதார மேம்பாட்டுத் துறை ஆணையத்தின் தலைவர் முகமது அலி அல் ஷரஃபா அல் ஹம்மாடி மம்முட்டி மற்றும் மோகன்லாலுக்கு கோல்டன் விசா பதிக்கப்பட்ட பாஸ்போர்ட்டை இன்று(23/08/21) மாலையில் வழங்கினார். இதற்கிடையே இன்று காலையில் இந்திய நடிகர் சுனில் ஷெட்டி தனக்கு வழங்கப்பட்ட கோல்டன் விசாவை நேரடியாக வந்து பெற்றிருந்தார் என்பதும் குறி்ப்பிடத்தக்கது.

இதை தொடர்ந்து மலையாள சினிமாவுக்கான வழங்கப்பட்ட அங்கீகாரமாக இதை பார்க்கிறேன் என்று மோகன்லால் கூறினார். மேலும் படத்தின் தயாரிப்புகளுக்கு ஆதரவளிப்பதாக அதிகாரிகளிடம் தெரிவித்ததாக அவர் கூறினார். ஐக்கிய அரபு அமீரக அரசின் மரியாதை கிடைத்ததில் மகிழ்ச்சி என்று கூறிய மம்மூட்டி, மலையாளிகள் தங்களுக்கு வழங்கிய அங்கீகாரம் இது என்றும் கூறினார். கோல்டன் விசாவைப் பெறுவதில் எம்ஏ யூசப்சாயின் முயற்சிகளுக்கு அவர்கள் இருவரும் நன்றி தெரிவித்தனர். அமீரக கோல்டன் விசா பெறுவதற்காக இருவரும் இரண்டு நாட்களுக்கு முன்பு துபாய்க்கு வந்தனர். எம்.ஏ யூசுபாலியின் சகோதரர் எம்.ஏ அஷ்ரபாலியின் மகனின் திருமணத்திலும் இருவரும் கலந்து கொண்டனர். ஐக்கிய அரபு எமிரேட் கோல்டன் விசா பல்வேறு துறைகளில் சிறந்த பங்களிப்பை வழங்கிய நபர்களுக்கு வழங்கப்படுகிறது. மலையாள சினிமாவைச் சேர்ந்தவர்களுக்கு கோல்டன் விசா கிடைப்பது இதுவே முதல் முறை. முன்னதாக இந்திய நடிகர்களான ஷாருக்கான் மற்றும் சஞ்சய் தத் ஆகியோர் கோல்டன் விசாக்களைப் பெற்றிருந்தனர். மேலும் ஷாருக்கான் அமீரக சுற்றுலா துறையின் Ambassador என்பதும் குறிப்பிடத்தக்கது

Add your comments to Uae News

அமீரக பயணத்தடை காரணமாக இந்தியாவில் சிக்கியுள்ள துபாய் நபர்களின் காலவதியான விசாக்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

அமீரகத்தில் ஏற்படுத்தப்பட்ட பயணத்தடை காரணமாக இந்தியாவில் சிக்கியுள்ள நபர்களின் காலவதியான விசாக்கள் நீட்டிக்கப்பட்டுள்ளன என்ற செய்தி வெளியாகியுள்ளது

Image : Beautiful Dubai

அமீரக பயணத்தடை காரணமாக இந்தியாவில் சிக்கியுள்ள துபாய் நபர்களின் காலவதியான விசாக்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்வதற்கான விமானத் தடை அறிவிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து இந்தியாவில் சிக்கித் தவிக்கின்ற துபாய் குடியிருப்பு விசா கைவசம் உள்ளவர்களில் காலாவதியான அனைத்து விசாக்களும் நவம்பர்-10,2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று துபாய் குடியிருப்பு மற்றும் வெளியுறவு இயக்குனரகம்(GDRFA) இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதுபோல் இந்தியாவை தவிர இலங்கை, பாகிஸ்தான், நேபாளம், நைஜீரியா மற்றும் உகாண்டா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த பயணத்தடை காரணமாக சிக்கியுள்ள நபர்களுக்கும் இந்த அறிவிப்பின் பலன் கிடைக்கும்.

மேலும் அந்த அறிக்கையில் ஏப்ரல்-20,2021 முதல் நவம்பர்-9,2021 வரையிலான தேதிகளுக்கு இடையே காலாவதியான அல்லது காலாவதியாகும் துபாய் குடியிருப்பு விசாக்களும் இவ்வாறு நீட்டிக்கப்படும். அதேநேரம் அக்டோபர்-20,2020 அன்றைய தினத்தில் இருந்து துபாயை விட்டு வெளியேறி, ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வெளியே ஆறு மாதங்களுக்கும் மேலாக வசித்து வருகிற துபாய் குடியிருப்பாளர்களுக்கான விசாக்கள் கைவசம் உள்ளவர்களின் விசா காலாவதி நீட்டிக்கப்படாது என்றும் அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

Add your comments to Uae News

Sunday, August 22, 2021

இந்தியர்கள் விசிட் விசாவில் துபாய் வரலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது;விதிமுறைகள் பின்வருமாறு

இந்தியா,இலங்கை உள்ளிட்ட 6 நாடுகளைச் சேர்ந்தவர்கள் விசிடிங் விசாவில் நிபந்தனைகளுடன் துபாயில் நுழைய அனுமதி

Image credit: Fly Dubai

இந்தியர்கள் விசிட் விசாவில் துபாய் வரலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது;விதிமுறைகள் பின்வருமாறு

இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் விசிட் விசாவில் துபாய்க்கு வரலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா, நேபாளம், நைஜீரியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் உகாண்டா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் தங்கள் நாட்டை விட்டு வெளியேறி மற்றொரு நாட்டில் குறைந்தபட்சம் 14 நாட்கள் தங்கியிருந்தால் விசிட் விசாவில் துபாயில் நுழையலாம் என்று Fly Dubai விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை அந்த நிறுவனத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் இப்படி பயணம் மேற்கொண்டால் கடந்த இரண்டு வாரம் தங்கியிருந்த நாட்டின் அடிப்படையில் பி.சி.ஆர் பரிசோதனை தொடர்பான அறிக்கை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இப்படி பயணிக்கும் பயணிகளுக்கும் GDRFA ஒப்புதலும் கட்டாயமாகும். மேலும், புறப்படுவதற்கு 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் முடிவும் பயணத்தின் போது எடுத்துவர வேண்டும். பரிசோதனை தொடர்பான சான்றிதழ் ஆங்கிலம் அல்லது அரபியில் QR குறியீடு உள்ளதாக இருக்க வேண்டும். அதேபோல் இந்தியாவிற்கு வெளியே 14 நாட்கள் தங்கியிருப்பவர்கள் விசிட் விசாவில் துபாய்க்கு வரலாம் என்றும் எமிரேட்ஸ் விமான நிறுவனமும் அறிவித்துள்ளது. பயணிகளின் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக எமிரேட்ஸ் ட்விட்டரில் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Dubai Visa | Visit Visa | Fly Dubai

Add your comments to Uae News

Thursday, August 19, 2021

தடை நீக்கப்பட்டது,இந்தியாவில் இருந்து இன்டிக்கோ விமானங்களின் சேவை நாளை முதல் அமீரகத்திற்கு மீண்டும் இயக்கப்படும் என்ற புதிய செய்தி வெளியாகியுள்ளது

இந்தியாவில் இருந்து அமீரகம் செல்ல இன்டிக்கோ விமானங்களுக்கு தற்காலிகமாக விதிக்கப்பட்ட தடை மீண்டும் நீக்கப்பட்டது

Image credit: Indigo Air

தடை நீக்கப்பட்டது,இந்தியாவில் இருந்து இன்டிக்கோ விமானங்களின் சேவை நாளை முதல் அமீரகத்திற்கு மீண்டும் இயக்கப்படும் என்ற புதிய செய்தி வெளியாகியுள்ளது

இந்தியாவில் இருந்து அமீரகம் செல்ல இன்டிக்கோ விமானங்களுக்கு ஒரு வாரத்திற்கு தற்காலிகமாக தடை விதித்து அமீரக விமான போக்குவரத்து துறை(DGCA) இன்று(19/08/21) காலையில் உத்தரவை வெளியிட்டது. Rapid-Test எடுக்காமல் பயணியை அமீரகத்திற்கு அழைத்துச் சென்ற நிலையில் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த முடிவு அடுத்தடுத்த தினங்களில் அமீரகம் திருப்புவதற்காக அனைத்து பயண நடைமுறைகளையும் முடித்து காத்திருக்கின்ற பயணிகளை பாதிக்கும் என்பதனால் மனிதாபிமான அடிப்படையில் நீக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த புதிய முடிவு வரும் நாட்களில் அமீரகம் திருப்புவதற்காக இன்டிக்கோ விமானங்களில் பயணச்சீட்டு முன்பதிவு செய்த பயணிகளுக்கு மிகவும் ஆறுதலான செய்தி ஆகும். முனுனர் தடை விதித்து இன்று காலையில் வெளியான செய்தியின் link: https://www.arabtamildaily.com/2021/08/the-uae-has-imposed-a-one-week-ban-on-indigo-flights-from-india-to-the-uae.html

Add your comments to Uae News

இந்தியாவில் இருந்து அமீரகம் செல்ல இன்டிக்கோ விமானங்களுக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது

இந்தியாவில் இருந்து அமீரகம் செல்கின்ற இன்டிக்கோ விமானங்களுக்கு ஒரு வாரத்திற்கு அமீரகம் திடிரென தடை விதித்துள்ளது

Image credit: Indigo Air

இந்தியாவில் இருந்து அமீரகம் செல்ல இன்டிக்கோ விமானங்களுக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது

ஐக்கிய அரபு அமீரகத்திற்கான இண்டிகோ விமானங்களுக்கு ஆகஸ்ட்-24,2021(செவ்வாய்கிழமை) வரை திடிரென தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக வெளியாகியுள்ள செய்தியில் விமான நிலையத்தில் வைத்து 6 மணிநேரத்திற்கு முன்பு எடுக்க வேண்டிய Rapid-Test எடுக்காமல் பயணிகளை துபாய்க்கு அழைத்து சென்றதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. எனவே இந்த நாட்களில் பயணச்சீட்டு முன்பதிவு செய்த பயணிகள் Refund வேண்டி விண்ணபிக்கவோ அல்லது மற்றொரு தேதிக்கு கட்டணம் இல்லாமல் பயணச்சீட்டை மாற்றிக் கொள்ளவோ செய்யலாம் என்று விமான நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துபாய் வருகின்ற பயணிகள் GDRFAD அனுமதி பெறுவதுடன், 48 மணிநேரத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட PCR பரிசோதனையும் மற்றும் 6 மணிநேரத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட Rapid-Test பரிசோதனையும் தேவை என்பது குறி்ப்பிடத்தக்கது. நேற்று முன்தினம் தான் 4 மணிநேரத்திற்கு முன்பு Rapid-Test எடுக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனை 6 மணிநேரத்திற்கு முன்பு என்று திருத்திய புதிய அறிவிப்பை அமீரகம் சார்பில் வெளியிட்டுள்ளது. பயணிகள் புறப்படும் விமான நிலையங்களில் ஏற்படும் நெரிசலை குறைக்க இந்த தளர்வு புதிதாக அறிவிக்கப்பட்டது. இந்த இரண்டு பரிசோதனையிலும் Negative யாக இருந்தால் மட்டுமே பயணிகள் விமானத்தில் நுழைய அனுமதி வழங்கப்படும் என்பது விதிமுறை ஆகும்.

Indigo Flight | India Uae | Temporary Suspended

Add your comments to Uae News